Tuesday, November 3, 2015

my kid's favorite dress..1

Short story: (based on a true incident, but built with little imagination...)அவளுக்கு வயது மூன்று. அந்த வயதிற்கே ஆன குறும்புகளுடன் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. தனக்கென்று பிடித்த நிறம், பிடித்த ஆடை, பிடித்த உணவு என்று தனக்கென்று ஒரு இரசனை, தான் ஒரு தனி உயிர் என்று உணர்ந்து வளர்கின்ற வயது.எப்போதென்று தெரியவில்லை ஆனால் நீல நிறம் உள்ள இரண்டு ஆடைகளுக்கு அடிமையாகிவிட்டாள். ஒவ்வொரு நாளும் குளித்து முடித்தவுடன் ஆடைக்காக ஒரு பெரிய சண்டை. முடிவில் ஜெயிப்பதேன்னவோ குழந்தை தான். அவளுக்கு பிடித்த ஆடை கிடைக்கும் வரை விட மாட்டாள்.இப்படி தான் ஒரு காலை,குழந்தை, மகிழ்ச்சியாக, "இன்னைக்கு நீல நிற ஆடை தானே?"நான், "அது இன்னும் துவைக்கவில்லையே.. இன்னைக்கு வேற ஆடை போட்டுக்கோ""எனக்கு அது தான் வேணும்"வாக்குவாதம் முற்றுகிறது.. குழந்தை வேறு ஆடைக்குள் திணிக்கப்படுகிறாள்.அடுத்த பிரச்சினை ஆரம்பிக்கிறது.."அப்பா, இன்னைக்கு பள்ளிக்கூடம் போக வேண்டாம்""சரி போக வேண்டாம்"சில நிமிடங்களுக்கு பிறகு.."அப்பா, நாளைக்கு நீல ஆடை போட்டுட்டு பள்ளிக்கூடம் போறேன்"ஆடை தான் பிரச்சினை என்று புரிந்தது. எதற்கு ஒரு நாள் விடுப்பு எடுப்பானேன் என்று, தலையணைக்கு உறை போடுவது போல நீல நிற ஆடைக்கு மாற்றப்படுகிறாள் குழந்தை. குழந்தையில் முகத்தில் மலர்கிறது அப்படி ஒரு மகிழ்ச்சி.அப்போது தான் அறிவிப்பூர்வமாக யோசித்து ஒரு முடிவெடுத்தேன் இனி அவள் விருப்ப ஆடையை அணிவிப்பதென்று. ஓரிரு வாரம் நன்றாகத்தான் போனது. சிரமம் என்னவென்றால் ஒன்று மாற்றி ஒன்று சரியாக துவைக்க வேண்டும். நம் சௌரியத்திற்க்காக வாரம் ஒரு நாள் துவைப்பது சரிவராது.
வார இறுதி. மறுபடியும் சிந்தித்து தான் அந்த விபரீத முடிவை துணிந்து எடுத்தேன். குழந்தையை கூட்டிக்கொண்டு ஆடை வாங்க கடைக்குள் நுழைந்தோம்.. (ஐயோ, என்ன காரியம் செய்யரீங்க-ன்னு நீங்க பதறுவது எனக்கு புரிகிறது.. அப்போது புரியவில்லை எனக்கு குறைந்தபட்சம் இன்னும் ஒரு ஆடை இருந்தால் மாற்றி மாற்றி துவைத்து போட வசதியாக இருக்கும். இரண்டு ஆடைகளை விட மூன்று ஆடை நமக்கு வசதி தானே. இது சரியாக போனால் அடுத்து நான்கு ஆடைகளாக்கும் இரகசியத்திட்டமும் என்னிடம் இருந்தது.குழந்தையின் தேடல் ஆரம்பிக்கிறது.. அவர்களுடைய தேடலில் விலை பட்டையோ, அடுத்தவர்கள் இந்த நிறத்தை ஏற்றுக்கொள்வார்களா என்ற கவலையில்லை. அந்த பார்வை நமக்குப்புரியாது. அதற்க்கெல்லாம் ஒரு தெளிவு வேண்டும். 5-10 நிமிடங்களுக்குள் கையில் ஒரு ஆடையோடும், முகத்தில் வெற்றிச்சிரிப்போடும் வருகிறாள். ஒரு பிரச்சினையில் தீர்வை நோக்கி முதல் படியை வெற்றிகரமாக கடந்த மகிழ்ச்சி எனக்கு.திங்கட்கிழமை காலை, எதிபார்த்தது மாதிரியே புது ஆடைக்குள் குதித்தாள் குதூகலமாக! அன்றைய காலை நன்றாகப்போனது.அடுத்த நாள் நான் எதிர்பாராத ஒன்று நடந்தது. தெளிவாகச்சொன்னாள் புதிதாக எடுத்த ஆடை தான் இன்றும் வேண்டும் என்று. பரவாயில்லை, புது ஆடை மீதான ஈர்ப்பு என்று அனுமதித்தேன்.அன்று மட்டும் அல்ல அடுத்து வந்த நாட்களும் அதே பதில் தான். அப்போது தான் புரிந்தது.. இரண்டு மூன்றாகவில்லை.. இரண்டு ஒன்றாகிவிட்டதென்று. முன்னால் பிடித்திருந்த அந்த இரண்டும் பிடிக்காமல் போய், இந்த ஒன்று தான் தினமும் என்று மாறிவிட்டது கதை. நீ எதையும் போடுவதில்லை, எல்லா ஆடைகளையும் வேறு யாருக்காவது கொடுக்கப்போகிறேன் என்று சொன்னதைப்பற்றி அவள் அலட்டிக்கொள்ளவே இல்லை.அடுத்து என்ன செய்வதென்று யோசிப்பதா.. அல்லது யோசிக்காமல் அப்படியே விட்டுவிடுவதா தெரியவில்லை. நாம யோசிச்சாலும் நமக்கு வினையாக அல்லவா முடிகிறது...அவ்வ்வ்வ் 

Monday, March 17, 2014


We get two holidays for every five working days. It looks kind of "Okay..". But, it is not. Here is why..

We always feel that the working days are long like months and week-ends are short like hours.

Going by Einstein's relativity theory, we are not getting holidays at all ! In other words, we are always working, and all we get is couple of coffee breaks called Saturday and Sunday  :(

Friday, March 7, 2014

"ஆரோக்கியமாக வாழ.."

"ஆரோக்கியமாக வாழ.."  என்ற தலைப்பில் 400 பக்கத்தில் ஒரு புத்தகம் இருந்தாலும் நாம் அதை சளைக்காமல் படிக்க தயாராவோம். ஆரோக்கியம் அவ்வளவு சிக்கலான விஷயமா? அதற்க்கு இவ்வளவு பெரிய புத்தகம் தேவையா? என்றெல்லாம் நாம் யோசிக்க மாட்டோம். மருத்துவத்துறை அவ்வளவு நம்பகமாக இல்லாத இன்றைய நிலையில் கண்டிப்பாக ஆரோக்கியம் முக்கியமானது. 

நான் கேட்டது படித்ததை வைத்து ஆரோக்கியம் என்பதை நம் முன்னோர்கள் ரத்தினச்சுருக்கமாக ஆறு வார்த்தையில் சொல்லிவிட்டு போய்விட்டார்கள் என்று நம்புகிறேன். உண்மையில் அவை வார்த்தைகளல்ல மந்திரம். அவற்றை நாம் உள்வாங்கிக்கொள்வதில்லை. மிக எழிமையான விஷயம் தான். 
"பசித்து புசி" & "நொறுங்க தின்றால் நூறுவயது வாழலாம்"

கடுமையான உழைப்பாளிகளுக்கு நோய் வருவதில்லை. அவர்கள் சமவிகித உணவுசாப்பிடுகிறார்களா? உடலை பாருங்கள் six-pack இருக்கும். protein (புரதம்) எடுத்துக்கொள்கிறார்களா?  கலோரி கணக்கு அவர்களுக்கு தெரியுமா? இல்லையே. அவர்கள் ஒன்றை  சரியாக செய்கிறார்கள்.. பசித்து.. நன்றாக பசித்து சாப்பிடுகிறார்கள். 

நன்றாக மென்று சாப்பிடுகிறார்கள என்று என்னால் சொல்ல இயலாது..

சரி, இதிலிருந்து புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் என்ன சாப்பிடுகிறோம் என்பதைவிட எப்படி சாப்பிடுகிறோம் என்பதே முக்கியம். 

ஆங்கிலத்தில் பிரபலமான ஒரு வாசகம் உண்டு, 
"An apple a day, keep the doctor away"
 
அவர்கள் தத்துவம் உணவை அடிப்படையாக வைத்து வந்துள்ளது. அதை தொடர்ந்து இவ்வளவு கலோரி ஒரு நாளைக்கு வேண்டும், இவ்வளவு புரதம் வேண்டும் என்று எல்லாமே உணவை சுற்றியே அவர்களுடைய தியரி உள்ளது. இவற்றிப்பற்றி எழுத 400 பக்கங்கள் கூட போதாது. எவ்வளவு எழுதினாலும் எடுத்துக்கொண்ட தலைப்பு முழுமை பெறாது.. 

ஆனால் நம்முடைய முன்னோர்கள் சொன்ன இந்த ஆறு வார்த்தைகள் ஆரோக்கியத்தின் இரகசியத்தை உள்ளடக்கியுள்ளது. முழுமை பெற்றது. பீடிகை ஏதுமில்லாததால், எழிமையாக இருப்பதால் நாம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். கடினமாக இருப்பதாலும், அரை குறையாய் புரிவதாலும் 400 பக்க நிறைவு இல்லாத ஆங்கில புத்தகத்தை நாடுகிறோம்.  
  
வாழ்க்கையில் பல விஷயங்கள் எழிமையானவயே.. சிலர் வியாபார நோக்கத்தில் அதை கடினமானதாக காட்டி அதை நம்மை நம்பவும் வைத்துவிட்டார்கள். 

பசிக்காத போது சாப்பிடும் உணவும் அரைபடாத உணவும் நோய் உண்டாக்கும்.  மந்திரத்தை முயற்சி செய்து பாருங்கள்.. பலன் அடையுங்கள் !

Saturday, January 4, 2014

yes or no.. binary for machines !

I used to like simple yes/no, right/wrong kind of answers(binary answers) to many questions.. i have learned many questions in life are not simple yes-or-no questions. Binary is for machines; no thought process involved in it. The real answers lie somewhere in between 0 and 1.

தொழில் நுட்பம்


அழகாக தூங்கும் குழந்தையை கண்டவுடன்
அனிச்சையாக கை காமெராவை தேட..
பதிவு செய்தான் அந்த தூங்கும் ஓவியத்தை..
வந்தனம் சொன்னான் அறிவியலுக்கு.

அருகில் சென்று கன்னம் வருடியவன்
அந்த ஸ்பரிசத்தைப் பதிவு செய்ய கருவி இல்லையே என்று
அறிவியலை நொந்தான்!

Wife and Govt..

The Govt has more rights on your money than your spouse. 
Your spouse can take money from your pocket without waiting for your permission.
The Govt is one step ahead, that it takes directly from your employer before even the money reaches your pocket 

ATM



Once we used to take money from bank waiting in long queues, that money lasted for weeks. Now the ATM coughs notes in seconds and the money hardly lasts for few days.