Friday, November 1, 2013

சிலேடை..


தமிழ் இலக்கணத்தில் சிலேடை என்று உண்டு. அது வேற ஒண்ணும் இல்லீங்க ஒன்றுக்கு மேற்ப்பட்ட பொருள் பட சொல்றது.. தமிழ் சினிமாவிலே அதிகமா வேண்டாம்னு இரட்டை அர்த்தத்தோடு நிறுத்திக்குவாங்க..முன்னாடி பார்த்திபன், இப்போ சந்தானம், விவேக், SJ சூர்யா இவங்கல்லாம் இந்த இலக்கணப்படி தான் அப்பப்போ எடுத்து விடுவாங்க, நகைச்சுவை என்ற பெயரில்.. நம்ம ஆளுங்களும் பயங்கரமா சிரிப்பாங்க. 

நானும் ஒன்னு சொல்றேன் நகைச்சுவையாக, 
"நம்ம அரசியல்வாதிகள் குழந்தைகள் மாதிரி தான் தெரியாம காச வாய்ல போட்ருவாங்க !"

இந்த வரியில், 1.தெரியாம 2.காசு 3.வாய் இந்த மூன்று வார்த்தைகளுக்கும் இரண்டு அர்த்தங்கள் உண்டு.. சொல்லாமலே புரியும்.. 

No comments:

Post a Comment