Saturday, April 9, 2011

காகிதக்கப்பல் விட ஞானம் வேண்டுமா...


சென்ற வருடம் மழைக்காலம்
என் வீட்டுக்குள்ளும் மழை நீர்
கண்ணில் பட்டவரிடம் எல்லாம் புலம்பித்தள்ளினேன் வீட்டுக்குள் மழை நீர் என்று...
பிறகு தான் தெரிந்தது அதே மழையில் பக்கத்துக்கு வீட்டுக்காரரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது..

இந்த வருடம் அதே மழைக்காலம்
என் வீட்டுக்குள்ளும் அதே மழை நீர்
அதே நான் . . .
ஆனால் இப்போது காகிதக்கப்பல் சகிதமாக குழந்தைகளுடன் குதூகலமாக! 

No comments:

Post a Comment